கடலூர் துறைமுகம் பச்சையாங்குப்பம் இரட்டை ரோடு ரயில்வே மேம்பாலத்தில் கடந்த ஒரு வாரமாக மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சமூக விரோதிகள் குற்றச்செயல்களில் ஈடுபடும் அபாயம் உள்ளது. எனவே மின்விளக்குகளை சீரமைக்க மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.