தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-11-02 12:43 GMT
கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே 2 பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் நெடுகிலும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காவிரி ஆற்றுப் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகளில் பல சரியாக எரியவில்லை. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிபட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெரு விளக்குகளை சரிசெய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்