மின் விளக்கு வசதி வேண்டும்

Update: 2022-11-02 11:49 GMT


தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள செல்லப்பட்டி சாலை வழியாக கருப்பட்டிப்பட்டி,அய்யம்பட்டி,பாச்சூர்,நாயக்கர்பட்டி, பொய்யுண்டார்கோட்டை போன்ற கிராமங்களுக்கு செல்லும் ஒரே முக்கிய சாலையாக உள்ளது. கல்லனை கால்வாய் கரையிலேயே சுமார் 2 கி.மீ தூரம் செல்ல வேண்டும். இந்த நிலையில் இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக மின் விளக்கு வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், செல்லப்பட்டி

மேலும் செய்திகள்