சேதமடைந்த மின் கம்பிகள்

Update: 2022-11-02 11:47 GMT

கும்பகோணம் வட்டம் சோழபுரம் அடுத்து குமரன்குடி ஊராட்சியில் உள்ள மின் கம்பத்தில் மின் கம்பிகள் மிகவும் மோசமடைந்து உள்ளது. தற்போது மழை பெய்வதால் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழபுரம், ஜெய்கணேஷ்..

மேலும் செய்திகள்