சாய்ந்த மின்கம்பம்

Update: 2022-10-30 12:12 GMT
கரூர் மாவட்டம், வெள்ளியணையிலிருந்து விஜயபுரம் செல்லும் சாலையில் கரூர்- திண்டுக்கல் ரெயில்வே மேம்பாலம் அடியில் சமத்துவபுரத்திற்கு செல்லும் சாலை பிரிவு பகுதியில் மின்கம்பம் ஒன்று நடப்பட்டு அதில் தெருவிளக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மின்கன்பம் தற்போது ஒருபுறமாக சாய்ந்து உள்ளது. இது கனமழையுடன் காற்று வீசும் போது முற்றிலும் கீழே சாய்ந்து விழுந்து சாலையில் செல்வோர்க்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலை உள்ளது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சாய்ந்து விழும் நிலையிலுள்ள மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் நட்டு அதில் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்