மின்மாற்றியை ஆக்கிரமித்த செடி-கொடிகள்

Update: 2022-10-26 12:44 GMT
திருச்சி மாவட்டம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி பி.மேட்டூரிலிருந்து புளியஞ்சோலை செல்லும் வழியிலுள்ள பிடாரி அம்மன் கோவில் ஆலமரத்தடியிலுள்ள மின்மாற்றியை செடி-கொடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் மழை பெய்யும்போது அசம்பாவிதங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்