ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-10-26 12:06 GMT

கரூர் மாவட்டம், நல்லிக்கோவில் பகுதியில் மின்சார வாரியம் சார்பில் பல ஆண்டுகளுக்கு முன் மின்கம்பம் நடப்பட்டு, அந்த மின் கம்பத்திலிருந்து அருகில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக மின் கம்பத்தில் உள்ள காங்கிரீட்டுகள் கீழே விழுந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து கீழே விழும் நிலையில் உள்ளதால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் பொதுமக்கள் நடமாவட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்