திறந்த மின்பெட்டியால் விபத்து அபாயம்

Update: 2022-10-23 16:17 GMT

 கடையம் யூனியன் திருமலையப்பபுரம் பஸ் நிறுத்தம் அருகில் சாலையோரத்தில் உள்ள இரும்பு மின்கம்பத்தின் மின்பெட்டியில் மூடி இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. இதன் அருகில் பள்ளிக்கூடம், ரேஷன் கடை, பஞ்சாயத்து அலுவலகம் உள்ளதால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மின்பெட்டிக்கு மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்