மின்கம்பிகளை சூழ்ந்த மரக்கிளைகள்

Update: 2022-10-19 13:40 GMT

கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து காந்திநகர் பகுதியில் சாைலயோரம் ஏராளமான புளியமரங்கள் உள்ளன. இதில் 2 மரங்களின் கிளைகள் பல மாதங்களாக அதிக அளவில் வளர்ந்து அந்த பகுதியில் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மரக்கிளைகள் மின்கம்பிகள் மீது உரசி அடிக்கடி தீப்பொறி பறக்கின்றன. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களும், அந்த வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்களும் அச்சப்படுகிறார்கள். பலத்த காற்று வீசும்போது மின்கம்பிகள் மரக்கிளையில் சிக்கி அறுந்து விழும் நிலை உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் மின்கம்பிகளை சூழ்ந்துள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்