தெரு விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2022-10-19 13:26 GMT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், சி.கூடலூர் கிழக்கு ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளியம் பாளையம் பிரிவு அருகே பச்சாங்காடு என்னும் இடத்தில் ஆதிதிராவிட நலத்துறைபின் மூலம் பட்டியல் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு மக்கள் குடியேறி வருகின்றனர். இந்த நிலையில் நான்கு வீதிகளின் முன்பகுதியில் தெருவிளக்கு வசதியில்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதினால் இப்பகுதி பெண்கள் பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்