திறந்து கிடக்கும் மின் பெட்டி

Update: 2022-10-19 11:15 GMT

நாகை அருகே ஒரத்தூர் சிதம்பரனார் உதவி பெறும் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமானவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் முன் மின்கம்பத்தில் உள்ள மின் பெட்டி திறந்த நிலையில் உள்ளது. மேலும் சிறுவர், சிறுமிகளுக்கு கைகளுக்கு எட்டும் வகையில் உள்ளது. இதனால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே திறந்து கிடக்கும் மின் பெட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்