ஆபத்தான மின்பெட்டி

Update: 2022-10-12 17:09 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் பேட்டப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மணியங்காளிப்பட்டி, செல்லாண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தநிலையில் அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நீரேற்று மின் மோட்டார் அரை சிறியதாக கட்டப்பட்டு மின் மோட்டார் சுவிட்ச் பொட்டி வைக்கப்பட்டிருந்தது. இது நாளடைவில் அடிப்பகுதியில் மண் சரிந்து ஒரு புறமாக சாய்ந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு அதை சீர்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேந்திரன், மோகனூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்