தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள்

Update: 2022-10-09 16:52 GMT

தர்மபுரி மாவட்டம் எ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி கோடியூர் கிராமத்தில் இருந்து தேங்காமரத்துப்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கே தாழ்வாக மின்கம்பிகள் தொங்குகின்றன. இதனால் இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள், டிராக்டர்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் செல்லும் போது மின் கம்பிகள் மீது உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் சாலையின் குறுக்கே தாழ்வாக செல்லும் மின் கம்பியை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஜெகன், தர்மபுரி.

மேலும் செய்திகள்