எலும்புக்கூடான மின்கம்பம்

Update: 2022-10-05 17:33 GMT
சிதம்பரம் தாலுகா அய்யானூர் கிராமம் சிங்காரத்தோப்பு தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து எலும்புக்கூடு போல் காணப்படுகிறது. இதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் மிகவும் பெலவீனம் அடைந்து காணப்படுவதால் எந்நேரத்திலும் விழுந்து மின்விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே விபரீதம் ஏதும் நிகழும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்திவிட்டு, புதிய கம்பத்தை மாற்றி அமைக்க மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்