சிதிலமடைந்த மின்கம்பம்

Update: 2022-10-02 15:38 GMT
கரூர் மாவட்டம், பேச்சிப்பாறை அருகே தார் சாலை ஓரத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின் கம்பம் நடப்பட்டது. அந்த மின்கம்பத்தின் வழியாக மின்கம்பிகள் இணைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. இந்நிலையில் மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக மின்கம்பத்தில் உள்ள கான்கிரீட்டுகள் கீழே விழுந்து கம்பிகள் மட்டும் தெரிகிறது. இதனால் எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து தார் சாலையில் விழும் சூழ்நிலையில் உள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்