கடலூர் துறைமுகம் பச்சையாங்குப்பம் இரட்டை ரோடு மேம்பாலத்தில் உள்ள மின்விளக்கு கடந்த சில ஆண்டுகளாக எரியவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், அவ்வழியாக செல்லும் மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. எனவே மின்விளக்கை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?