மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு மற்றும் அதனை சுற்றி உள்ள வயல் வெளியில் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இதன்காரணமாக மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் அறுவடை எந்திரங்கள், டிராக்டர்களை வயலுக்குள் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், பொறையாறு