அகற்ற வேண்டிய மின்கம்பம்

Update: 2022-09-28 17:08 GMT

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே ஒப்பாறைப்பட்டி கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே மிகப்பெரிய ஆலமரம் உள்ளது. அந்த மரத்தின் அருகே மின்கம்பிகள் செல்வதால், மரத்தின் விழுதுகள் மின்கம்பியை உரசியவாறு செல்கிறது. இதனால் மழை பெய்தாலோ அல்லது காற்று அடித்தாலோ அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பெரிய விபத்துகள் ஏற்படும் முன்பு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை அகற்ற வேண்டும்.

-எம்.முருகேசன், பாரப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்