மின்தடையால் அவதி

Update: 2022-09-28 15:02 GMT


மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி தினமும் 5 மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தற்போது மாணவ-மாணவிகளுக்கு தேர்வு நடைபெறுவதால் படிக்க முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அறிவிப்பு இன்றி மின்தடை ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,திருக்கடையூர்

மேலும் செய்திகள்