ராமேசுவரம் சங்குமால் கடற்கரை பூங்கா நடைபாதையில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.எனவே மின்விளக்கு எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.