பக்தர்களை அச்சுறுத்தும் மின்மாற்றி

Update: 2022-09-27 12:41 GMT
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாலவிடுதி செங்காட்டில் ஸ்ரீரெணகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் முன்பு மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் திருவிழா நாட்களிலும், சிறப்பு அபிஷேகம் நடைபெறும் போதும் சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் ஒன்று கூடும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கோவில் முன்பு மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்