தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-07-14 16:47 GMT

திருச்சி நவல்பட்டு காவிரி நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள மின்கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த மின்கம்பத்தை மாற்றிவிட்டு அதற்கு பதில் புதிய மின்கம்பம் நட்டனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்