இரவில் எரிய வேண்டிய கோபுர விளக்கு

Update: 2022-09-25 16:52 GMT

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பஸ் நிலையத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்த விளக்கு இரவு நேரத்தில் எரிவது மட்டுமில்லாமல் பகல் நேரத்திலும் எரிந்து கொண்டு இருக்கிறது. எனவே இரவு நேரங்களில் மட்டும் உயர் கோபுர மின்விளக்கு எரிய செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

-சங்கர், ராசிபுரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்