தெருவிளக்கு எரியவில்லை

Update: 2022-09-25 16:50 GMT

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கொப்பம்புதூர் பகுதியில் அரசுப்பள்ளி அமைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள தெருவிளக்கு பழுதடைந்து எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். மேலும் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தெருவிளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

-தினேஷ்குமார், கொப்பம்புதூர், சேலம்.

மேலும் செய்திகள்