பாதியில் நிற்கும் மின்கம்பம் பணி

Update: 2022-09-25 16:49 GMT

சேலம் அமாணி கொண்டலாம்பட்டி அரசு மரத்து கரட்டூர் ஆட்டோ நகர் உள்ளது. இந்த பகுதி தேசிய நெடுஞ்சாலை யோரம் ஒரு ஆண்டு காலமாக மின் கம்பம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்தநிலையில் அந்த மின்கம்பத்தை அகற்ற அதன் அருகில் 6 மாதத்திற்கு முன்பு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த புதிய மின் கம்பத்திற்கு இணைப்பை மாற்றி அமைக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுவைத்துள்ளனர். எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சாய்ந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்திற்கு மின்இணைப்பு கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-வெங்கடேசன், நாட்டாமங்கலம், சேலம்.

மேலும் செய்திகள்