பரங்கிப்பேட்டை அருகே பெரியமது பகுதியில் அமைந்துள்ள மின்கம்பத்தில் செடி, கொடிகள் அதிக அளவில் படர்ந்து, மின்கம்பமே தெரியாத வகையில் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் எப்போது வேண்டுமானாலும் மின்விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே விபரீதம் நிகழும் முன் மின்கம்பத்தை சூழ்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற, மின்சாரத்துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.