கடலூர் வன்னியர்பாளையம் வேலுநகர் பகுதியில் மின்சார பெட்டிகளில் உள்ள பியூஸ் கேரியா்களை அடிக்கடி மர்மநபர்கள் திருடிச்செல்வது தொடர்கதையாகி வருகிறது. இதனால் மின்சாரம் இன்றி அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே வேலுநகர் பகுதியில் போலீசார் ரோந்து சென்று தொடர் திருட்டில் ஈடுபடும் கும்பலை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.