டி.என்.பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஒடையாக்கவுண்டன்பாளையம் பகுதியில் முன் அறிவிப்பு ஏதும் இன்றி அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மின் சாதனங்களை இயக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே மின்தடை இல்லாமல் முறையாக மின்சாரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.