மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம், எடமணல் ஊராட்சி மேலப்பாளையம் கிராமத்தில் மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின் மாற்றி பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக மின்மாற்றியை தாங்கிபிடித்துள்ள மின்கம்பங்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்மாற்றி எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் சூழல் உள்ளது. இதன் காரணமாக மின்மாற்றி உள்ள பகுதியை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்மாற்றியை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?