ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-09-13 11:52 GMT

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள முத்தனூர்சுடுகாட்டுக்கு செல்லும் பிரிவு சாலை அருகே நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் தார் சாலை ஓரத்தில் மின் கம்பம் நடப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தில் உள்ள மின் கம்பிகள் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் செல்கிறது. மின்கம்பம் நடப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் தற்போது கம்பம் சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்