மின்கம்பம் மாற்றப்பட்டது

Update: 2022-09-13 08:43 GMT

காட்டாத்துறை சந்திப்பில் இருந்து மருதூர்குறிச்சி செல்லும் சாலையில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் அருகே பூவன்விளைதெருவில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் மிகவும் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நட்டனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்