எரியாத தெருமின் விளக்குகள்

Update: 2022-09-12 12:06 GMT

உளுந்தூர்பேட்டையில் உள்ள உளுந்தூர் காலனி பகுதியில் உள்ள தெருமின் விளக்குகள் கடந்த சில வாரங்களாக எரியவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி மர்மநபர்கள் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் இரவில் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். ஆகவே எரியாத தெருமின் விளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்