ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-09-11 15:27 GMT

கரூர் மாவட்டம், நடையனூரில் இருந்து பேச்சிப்பாறை நவீன எரிவாயு மயானத்திற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் மின் கம்பம் நடப்பட்டு அந்தப் பகுதியில் உள்ள விவசாய கிணறுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த வழியாக பல்வேறு பகுதிகளுக்கு இந்த மின்கம்பத்திலிருந்து 24 மணி நேரமும் மின் வினியோகம் செல்கிறது. இந்நிலையில் மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக மின் கம்பம் மிகவும் சிதிலமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்