மின்விளக்குகள் பொருத்தப்படுமா?

Update: 2022-09-11 12:22 GMT

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் படி ஏறும் வழிக்கு அருகில் மேற்கு திசையில் பல்லவர் கால குடைவரைக் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாலை நேரங்களில் செல்லும்போது போதிய வெளிச்சம் இல்லாததால் அங்கு உள்ள சிலைகள் கண்ணுக்கு புலப்படுவதில்லை. மேலும் அதிசயமாக அனைத்து இறைவன் உருவங்களும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. எனவே திருச்சி மலைக்கோட்டையின் கீழ் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட குடவரை கோவிலுக்கு மின் இணைப்பு வசதி ஏற்படுத்தி மின்விளக்குகள் அமைத்துக் கொடுத்தால் பக்தர்கள் இரவு நேரங்களிலும் தரிசன வழிபாடு செய்ய ஏதுவாக இருக்கும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்