சாலையின் நடுவே உள்ள மின்கம்பம்

Update: 2022-09-09 13:42 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பிச்சாண்டார்கோவில் ஊராட்சி, செல்லம்மாள் நகரில் இருந்து மங்களா நகர் செல்லும் சாலையின் நடுவே மின்கம்பம் அமைந்துள்ளது. இந்த சாலையின் வழியாக பள்ளி வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இச்சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் ஒரு வாகனம் வரும் போது எதிரே வரும் வாகனம் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இரவில் இந்த மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்