சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே சங்கராபுரம் பகுதியில் உள்ள மின்கம்பங்கள் பழுதாகிய நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் இந்த மின்கம்பங்கள் அமைந்துள்ள சாலையை கடக்க பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்தப்பகுதியில் அமைந்துள்ள மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.