நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் ஆயிபாளையம் பகுதியில் இருந்து தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வழியாக முனியப்பன் கோவில் செல்லும் சாலையில் மின்கம்பம் சாய்ந்து சாலையில் விழும் நிலையில் இருந்தது. சாய்ந்து விழாமல் இருக்க அந்த பகுதி மக்கள் மின்கம்பத்தை கயிற்றால் இழுத்து கட்டி வைத்துள்ளனர். இதுகுறித்து அத்தனூர் மின்சார துறைக்கு தகவல் தெரிவித்து ஒரு வாரம் ஆகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு ஆபத்தான மின் கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரஞ்சிதா, ஆயிபாளையம், நாமக்கல்.