மின்விளக்குகள் ஒளிருமா?

Update: 2022-09-04 13:11 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை முறையான பராமரிப்பின்றி காணப்படுவதால் சரிவர எரிவதில்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்