திருச்சி மாவட்டம், முசிறி அய்யம்பாளையம் ஸ்டோர்ஸ் தெருவில் மின் கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் செல்லும் மின்சார கம்பிகளில் மரக்கிளைகள் உரசி செல்கிறது. இதனால் எந்த நேரம் வேண்டுமானாலும் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.