திருச்சி மாவட்டம், பொன்மலைப்பட்டி கடை வீதியில் இருந்து பொன்னேரிபுரம் செல்லும் சாலையில் காந்தி நகர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளின் மேல் தாழ்வாக மின்சார கம்பிகள் கடந்து செல்கின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.