பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், அடைக்கம்பட்டி கிராம பஸ் நிறுத்தத்தில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதினால் வெளியூர் செல்லும் மக்கள், வேலைக்கு சென்று வருபவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.