திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள வலையூரில் பஸ் நிறுத்தத்தின் அருகில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இப்பகுதி வழியாக பள்ளி மாணவ-மாணவிகள், அரசு அதிகாரிகள்,பொதுமக்கள்,விவசாயிகள் என்று பலதரப்பட்ட மக்களும் அதிக அளவில் சென்று வருகின்றனர்.இந்நிலையில், அதிகாலை நேரம் மற்றும் இரவு 10 மணிக்கு மேலும் கள்ளத்தனமாக மது விற்கப்படுவதால் எப்போது சென்றாலும் மது கிடைக்கும் என்ற எண்ணத்தில் மது பிரியர்கள் அங்கே வந்து மது அருந்திவிட்டு தகாத வார்த்தைகளை பேசிக்கொண்டு செல்கின்றனர். இதனால்,அவ்வழியே செல்லும் மாணவ, மாணவிகள், அரசு அதிகாரிகள், பெண்கள், உள்ளிட்டோர் அருவருப்புடனும், அச்சத்துடனும் செல்கின்றனர். இதுகுறித்து சிறுகனூர் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசாருக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, போலீஸ் உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.