கரூர் மாவட்டம் நொய்யல், குறுக்குச்சாலை, புன்னம் சத்திரம், தவுட்டுப்பாளையம், நஞ்சைபுகழூர், கரைப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தார்சாலை ஓரத்தின் நெடுகிலும் மின்கம்பங்கள் நடப்பட்டு, அதன் வழியாக மின்கம்பிகள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தார்சாலை ஓரத்தில் மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார்சாலை ஓரத்தில் நடப்பட்டுள்ள மின்கம்பங்களை மாற்று இடத்தில் நட்டு விபத்தை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.