மின்விளக்குகள் எரியவில்லை

Update: 2022-07-09 19:18 GMT

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே மோப்பிரிப்பட்டி சாலையில் 3 மாதங்களாக மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இரவு நேரங்களில் சாலையில் செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும் இதனை சாதகமாக பயன்படுத்தி மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபடுகிறார்கள். விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்து விட்டன. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மின்விளக்குகளை ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்