திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பழங்காவேரி, சேரன் நகர், பாரதி நகர் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெருக்களில் உள்ள மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் சமூக விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.