கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட இனயம் மணல் தெரு உள்ளது. இந்த பகுதியில் உள்ள மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் பல மாதங்களாக பழுதடைந்து எரியாமல் காணப்பட்டது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்விளக்கை மாற்றி புதிய விளக்கை பொருத்தி எரிய வைத்தனர். இதுபற்றி செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தொிவித்தனர்.