மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ்சேரி கோவில் அருகே உள்ள மின் கம்பத்தில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் இவ்வழியே செல்லும் கனரக வாகனங்களில் மின் கம்பிகள் உரசி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் கம்பிகளை தாழ்வாக செல்லாமல் மேலே உயர்த்தி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருமணஞ்சேரி