தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2022-08-26 14:13 GMT

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள முத்தனூரில் இருந்து செல்வநகர் செல்லும் தார் சாலை ஓரத்தில் மின் கம்பங்கள் நடப்பட்டு அந்த வழியாக மின்கம்பிகள் செல்கிறது. இந்நிலையில் மின்கம்பம் நடப்பட்டு கம்பிகள் பொருத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் பெரிய வாகனங்கள் இந்த வழியாக செல்லும்போது மின் கம்பிகள் உரசும் சூழல் உள்ளது. எனவே தாழ்வாக உள்ள மின்கம்பியை சீரமைக்க சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்