பெரம்பலூர் நகராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட புதிய மதனகோபாலபுரத்தில் தனியார் மண்டபம் அருகே உள்ள பகுதியில் மின்கம்பம் ஒன்று சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து எலும்பு கூடாக காட்சியளிக்கிறது. அந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி மிகவும் சேதமடைந்து உள்ளது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் அதனருகே சிறுவர்-சிறுமிகள் விளையாடி வருவது வழக்கம். எனவே சம்பந்தப்பட்ட எந்தவொரு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன்பு அந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.