பாதுகாப்பற்ற மின்சாதன பெட்டி

Update: 2022-08-25 15:45 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், சின்னவளையம் வடக்குத்தெருவில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நீர்த்தேக்க தொட்டியுடன் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டாரை இயக்க வைக்கப்பட்டுள்ள மின்சாதன பெட்டி பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ளது. மழைபெய்யும்போது இந்த மின்சாதன பெட்டி அருகே மழைநீர் தேங்கி நிற்பதினால் இவற்றை பயன்படுத்த முடிவது இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்